sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒடிசாவில் 60 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்; கடத்தல் கும்பல் தப்பியோட்டம்

/

ஒடிசாவில் 60 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்; கடத்தல் கும்பல் தப்பியோட்டம்

ஒடிசாவில் 60 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்; கடத்தல் கும்பல் தப்பியோட்டம்

ஒடிசாவில் 60 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்; கடத்தல் கும்பல் தப்பியோட்டம்

2


ADDED : நவ 03, 2025 08:22 AM

Google News

ADDED : நவ 03, 2025 08:22 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசாவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 60 கிலோ கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இழது தொடர்பாக மால்காங்கிரி மாவட்ட எஸ்பி வினோத் பாட்டில் கூறியதாவது; எஸ்ஸார் சவுக்கில் உள்ள சால மரக்காட்டு பகுதியில் கஞ்சா எண்ணெயை ஆந்திராவை சேர்ந்தவருக்கு விற்பதற்காக, பைக்குகளில் 8 பேர் கூடியிருப்பதாக நேற்று காலை 11 மணியளவில் சித்ரகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனடியாக போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

இதனைக் கண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர், அவர்களின் பைக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் இருந்த கஞ்சா எண்ணெய்களை விட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றும், அடர்ந்த காடுகளை பயன்படுத்தி அந்த கும்பல் தப்பிவிட்டது.

இதையடுத்து, பைக்குகளும், கஞ்சா எண்ணெய்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய் 60 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகளவு கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்வது இதுவே முதல்முறையாகும், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us