60 சதவீதம் கன்னடம் கட்டாயம் ; அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
60 சதவீதம் கன்னடம் கட்டாயம் ; அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஜன 06, 2024 12:56 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கடைகள், ஹோட்டல்களின் பெயர் ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம் என அவசர சட்டம்கொண்டு வரப்பட்டு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கடைகள், ஹோட்டல்கள். சிறு உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை அங்கு நடத்தி வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் கடைகளின் பெயர் பலகைகளில் கன்னட மொழி இல்லை எனக் கூறி கர்நாடக ரக்ஷக் வேதிக் அமைப்பினர் கடந்த சில வாரங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமயை தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் கன்னட மொழி கட்டாயம் என்ற அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி பெங்களூரில் சாலையோர கடைகள் துவங்கி பெரிய மால்கள் வரையிலான இடங்களின் பெயர்ப்பலகையில் 60 சதவீதம் கன்னட எழுத்துக்கள் இடம்பெற வரும் பிப்ரவரி இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
'உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளின் உரிமம் முதலில், 'சஸ்பெண்ட்' செய்யப்படும். தொடர்ந்து மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.