காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள்!
காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள்!
ADDED : டிச 29, 2024 07:25 PM

புதுடில்லி: 'நடப்பாண்டில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 60 சதவீத பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்' என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் அவ்வப்போது, பயங்கரவாதிகள் ஊடுருவும்போது, நமது ராணுவம், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. புதுடில்லியில் இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளின் அனைத்து பகுதிகளுக்கும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது.
கடந்த ஆண்டு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் முயன்றது. எனினும் பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சியால், ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், இந்தாண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.