sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்

/

சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்

சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்

சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்

5


ADDED : நவ 04, 2025 03:28 PM

Google News

5

ADDED : நவ 04, 2025 03:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: துபாயில் கைதான 'மகாதேவ்' ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனர்களில் ஒருவரான ரவி உப்பால் என்பவர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோர் ' மகாதேவ்' என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலியை துவக்கி நடத்தி வந்தனர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாய் நகருக்கு இவரும் 2019 ல் சென்றனர். அங்கிருந்தபடி மகாதேவ் செயலியை அவர்கள் இயக்கி வந்தனர். இந்த சூதாட்ட செயலியை நம்பி விளையாடிய லட்சக்கணக்கானோர் பல கோடி ரூபாய் பணத்தை இழந்தனர்.

இதனால், சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சத்தீஸ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இருவரையும் கடந்த 2023ம் ஆண்டு இருவரையும் துபாய் போலீசார் பிடித்து வைத்து நம்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நம் நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தலின்படி இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கு இடையே சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் எனப்படும் தேடப்படும் குற்றவாளி என்பதற்கான நோட்டீசை பிறப்பிக்கும்படி, 'இன்டர்போல் ' எனப்படும் சர்வதேச போலீசுக்கு அமலாக்கத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதன்படி இருவருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைப்படி இருவரையும் துபாய் போலீசார் கைது செய்து தகவல் அளித்தனர்.

பின்னர் இருவரையும் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் நம் நாட்டு அதிகாரிகள் இறங்கினர். இதற்கு இடையில் ரவி உப்பால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ரவி உப்பால் ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து வெளியேறிவிட்டார் எனவும், எங்கு சென்றுள்ளார் என தெரியவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரை நாடு கடத்துவதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

முறையான ஆவணங்களை அமலாக்கத்துறை அளிக்காததே, ரவி உப்பலை நாடு கடத்துவதற்கு ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அனுமதிக்கவில்லை என ஒரு தகவல் உள்ளது. ஆனால், இதனை மறுத்த அமலாக்கத்துறை உரிய நேரத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.






      Dinamalar
      Follow us