12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் கமிஷன் தகவல்
12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் கமிஷன் தகவல்
UPDATED : ஜன 07, 2026 08:07 PM
ADDED : ஜன 07, 2026 07:58 PM

புதுடில்லி: இரண்டாம் கட்டமாக நடந்த எஸ்ஐஆர் பணிகளில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6. 5 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், உபி., மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம் மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் திருத்தப்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தப் பணியில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அக்., 27 ல் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் துவங்குவதற்கு முன்னர் இந்த மாநிலங்களில் 50.90 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்தப் பணி முடிந்த பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள்பட்டியலில் மொத்தம் 44.40 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் 'ஆப்சென்ட்', 'இடம்பெயர்ந்தவர்கள்', அல்லது இறந்தவர்கள் ஆகிய பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளை பொறுத்தவரை, நகரப்பகுதிகளை விட கிராமப்புறங்களில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாநில வாரியாக
உ.பி., - 2.89 கோடி
தமிழகம் -97.38 லட்சம்
குஜராத் 73.7 லட்சம்
மேற்கு வங்கம் -58 லட்சம்
மபி -42.7 லட்சம்
சத்தீஸ்கர் - 27 லட்சம்
கேரளா - 24 லட்சம்
ராஜஸ்தான் -42 லட்சம்
புதுச்சேரி-1.03 லட்சம்
கோவா - 1.42 லட்சம்
லட்சத்தீவுகள் - 1,200 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

