sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

/

கோவில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

கோவில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

கோவில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி


ADDED : ஜூலை 28, 2025 12:01 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹரித்வார்: உத்தராகண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவில் உள்ளது. விடுமுறை நாளையொட்டி, கோவிலுக்கு நேற்று அதிகளவில் பக்தர்கள் வந்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய கோவிலில் உள்ள படிக்கட்டுகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

காலை 9:00 மணி அளவில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் அனைவரும் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர்.

இதில் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். தகவலறிந்த போலீசார், மயக்கமடைந்த 35 பேரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக பக்தர்களிடையே பரவிய வதந்தியே நெரிசலுக்கு காரணம் என, தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய்; காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கூட்ட நெரிசல் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us