காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் காயம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் காயம்
ADDED : ஜன 18, 2026 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஸ்திவார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.
இதையறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் வீரர்கள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் தப்பி விடாமல் இருக்க அந்தப் பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

