sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 3,250 முறை நடந்து சென்று திருமலை கோவிலில் தரிசித்த 71 வயது முதியவர்

/

 3,250 முறை நடந்து சென்று திருமலை கோவிலில் தரிசித்த 71 வயது முதியவர்

 3,250 முறை நடந்து சென்று திருமலை கோவிலில் தரிசித்த 71 வயது முதியவர்

 3,250 முறை நடந்து சென்று திருமலை கோவிலில் தரிசித்த 71 வயது முதியவர்


ADDED : டிச 11, 2025 07:11 AM

Google News

ADDED : டிச 11, 2025 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: ஆந்திராவை சேர்ந்த, 71 வயது முதியவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 3,250 முறை பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்துள்ளார்.

ஆந்திராவின் திருப்பதியை சேர்ந்தவர் வெங்கட ரமண மூர்த்தி, 71. எஸ்.பி.ஐ., வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், ஓய்வு பெற்ற பின் வாரம் நான்கு நாட்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதுவரை 3,460 முறை திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதில், அலிபிரி நடைபாதையில் மட்டும், 3,250 முறை பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்த வழித்தடத்தில் உள்ள, 2,388 படிகளையும் ஒன்றரை மணி நேரத்தில் கடந்து சென்று தரிசனம் செய்துள்ளார்.

அப்போது, 'கோவிந்தா, கோவிந்தா' என பெருமாளின் நாமத்தை உச்சரித்தபடி செல்வாராம். '71வயதிலும் ஏழுமலையானை தரிசிக்க தன்னை ஆரோக்கியமாக வைத்துள்ள இறைவனுக்கு நன்றி' என்றார் வெங்கட ரமண மூர்த்தி.

தள்ளாத வயதிலும் ஏழுமலையானை தரிசிக்க நடந்து செல்லும் இவரது பக்தி, பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.






      Dinamalar
      Follow us