72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!
72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!
ADDED : மே 16, 2024 04:43 PM

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் 72 மணி நேர சோதனைக்கு பிறகு, ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நூற்றுக்கணக்கான வருமான வரித் துறை அதிகாரிகள் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பண்டாரி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் மற்றும் ஆதிநாத் அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.
ரூ.170 கோடி
அப்போது, ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வருமான வரித்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.