sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐந்து ஆண்டில் சாலை விபத்துகளில் 7.77 லட்சம் பேர் பலி: 2வது இடத்தில் தமிழகம்

/

ஐந்து ஆண்டில் சாலை விபத்துகளில் 7.77 லட்சம் பேர் பலி: 2வது இடத்தில் தமிழகம்

ஐந்து ஆண்டில் சாலை விபத்துகளில் 7.77 லட்சம் பேர் பலி: 2வது இடத்தில் தமிழகம்

ஐந்து ஆண்டில் சாலை விபத்துகளில் 7.77 லட்சம் பேர் பலி: 2வது இடத்தில் தமிழகம்

13


ADDED : டிச 14, 2024 06:12 PM

Google News

ADDED : டிச 14, 2024 06:12 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 7.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெற்ற விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி 2018 -2022ல் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்தில் 7.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்கள்

உ.பி., - 1,08,882

தமிழகம் - 84,316

மஹாராஷ்டிரா - 66,370

ம.பி., - 58,580

கர்நாடகா - 53,448

ராஜஸ்தான் - 51,280

ஆந்திரா - 39,058

பீஹார்- 36,191

தெலுங்கானா - 35,565

குஜராத் - 36,626 பேர் உயிர் இழந்துள்ளனர்.

2022ம் ஆண்டு மட்டும் 1,68,491 உயிர் இழந்துள்ளனர்.இந்த ஆண்டில்,

உ.பி.,யில் - 22,595 பேரும்

மஹாராஷ்டிராவில்-15, 224 பேரும்

தமிழகத்தில் -17,884 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக வாகனம் ஓட்டியது, மொபைல் போன் பயன்படுத்துல், மதுபோதையில் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறி வாகனம் இயக்கியது ஆகியவை சாலை விபத்துக்கான முக்கிய காரணியாக உள்ளது.

விபத்துகளை குறைக்க, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து மீறல்களை கட்டுப்படுத்த அபராதத்தை உயர்த்தும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு திருத்தியது. 2020 ம் ஆண்டில் மட்டும் ரூ.36,700 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சமீபத்தில் லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ' இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்து காரணமாக, சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களில் முகத்தை மூட முயன்றேன்,' எனக்கூறியிருந்தார்.






      Dinamalar
      Follow us