sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

8 கோடி நில பதிவேடுகள் கணினிமயம்; அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தகவல்

/

8 கோடி நில பதிவேடுகள் கணினிமயம்; அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தகவல்

8 கோடி நில பதிவேடுகள் கணினிமயம்; அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தகவல்

8 கோடி நில பதிவேடுகள் கணினிமயம்; அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தகவல்


ADDED : ஜன 29, 2025 08:19 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; மாநிலத்தில் 8 கோடி நில பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதாக, முதல்வர் சித்தராமையாவிடம், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் வருவாய் துறை அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

நல்ல அறிகுறி


இந்த தலைமை செயலர் ஷாலினி, நிதி துறை கூடுதல் தலைமை செயலர் அதீக், வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது வருவாய் நீதிமன்றங்களில் 10,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 369 வழக்குகள் மட்டும் உள்ளன. இது நல்ல அறிகுறி.

வருவாய் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ராணுவ சட்டத்தின் அடிப்படையில் முடித்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

முழு நில மாற்ற செயல்முறைகளையும் ஒரு மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக மாஸ்டர் பிளான் உருவாக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மாஸ்டர் பிளான்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

பிறழ்வு மற்றும் நில மாற்ற வழக்குகளில் சாதாரண மக்களுக்கு எந்தவித துன்புறுத்தலோ அல்லது தேவையற்ற தாமதமோ ஏற்படாத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாசில்தார், கலெக்டர் அலுவலக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் ஒழுங்கற்ற முறையில் முடிக்கப்படுகின்றன. இது சரியான நடவடிக்கை இல்லை. இதுதொடர்பாக இறுதி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட வேண்டும்.

ஆதார் இணைப்பு


நிலக்கணக்கிற்கு ஆதார் இணைப்பு செய்யப்படுகிறது. மாநிலத்தில் இதுவரை 2.22 கோடி நில கணக்கிற்கு ஆதார் இணைப்பு செய்யப்பட்டு உள்ளது. இது போலி ஆவணங்கள் உருவாக்கப்படுவதை தடுக்கும்.

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு பட்டாக்கள் வழங்குவதை நிறுத்த ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பி பட்டா உரிமம் வழங்கும் செயல்முறையை முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் அதிகரிக்க அதிகாரிகள் அனுமதிக்க கூடாது.

நில பதிவேடுகளை பாதுகாக்கவும், பதிவேடுகள் சிதைக்கப்படுவதை தடுக்கவும் நில பாதுகாப்பு திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலத்தில் 8 கோடி நில பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதாக, முதல்வரிடம், அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா எடுத்து கூறினார். இதற்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us