சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி; டில்லியில் சோகம்
சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி; டில்லியில் சோகம்
UPDATED : ஆக 09, 2025 10:24 PM
ADDED : ஆக 09, 2025 02:59 PM

புதுடில்லி: தொடர் கனமழை காரணமாக டில்லியில் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் கிழக்கு டில்லியில் அமைந்துள்ள ஜெய்த்பூரில் பகுதியில் ஹரிநகர் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பழமையான கோவிலின் சுவர் இடிந்து குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில், 8 பேர் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஷபிபுல்,30, ரபிபுல்,30, முட்டு அலி,45, ரூபினா,25,டோலி,25,ருக்சானா,6, ஹசனா,7, உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,'தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மிகவும் பழமையான கோவிலின் சுவர் சரிந்து விழுந்து இந்த கோர நிகழ்வு அரங்கேறியுள்ளது. இனி இதுபோன்று நிகழாமல் இருக்க, குடிசைவாசிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்,' என்றனர்.