sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு காஷ்மீரில் 8,000 போலி வங்கி கணக்குகள் முடக்கம்; பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியது அம்பலம்

/

ஜம்மு காஷ்மீரில் 8,000 போலி வங்கி கணக்குகள் முடக்கம்; பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியது அம்பலம்

ஜம்மு காஷ்மீரில் 8,000 போலி வங்கி கணக்குகள் முடக்கம்; பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியது அம்பலம்

ஜம்மு காஷ்மீரில் 8,000 போலி வங்கி கணக்குகள் முடக்கம்; பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியது அம்பலம்

6


UPDATED : பிப் 15, 2026 10:51 PM

ADDED : பிப் 15, 2026 10:33 PM

Google News

6

UPDATED : பிப் 15, 2026 10:51 PM ADDED : பிப் 15, 2026 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 8,000 போலி வங்கி கணக்குகளை பாதுகாப்பு அமைப்புகள் முடக்கியுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய 'டிஜிட்டல் ஹவாலா வலையமைப்பு' செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படும் பண பரிவர்த்தனைகளை, கடந்த 2017ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை முடக்கியது.குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு ஹவாலா வாயிலாக வரும் அனைத்து வழிகளையும் என்.ஐ.ஏ., மூடியது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பயங்கரவாத அமைப்புகள், 'டிஜிட்டல் ஹவாலா' என்ற புதிய வழியைக் கண்டுபிடித்தன. அதாவது, பணப் பரிவர்த்தனைக்கு சாதாரண மக்களின் வங்கிக் கணக்கை வாடகை எடுத்து பயன்படுத்துவது. இதனை 'மியூல்' கணக்கு என அழைக்கின்றனர்.

வாடகை கணக்குகள்

இப்படி ஜம்மு - காஷ்மீரில் மட்டும் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கை வாடகைக்கு எடுத்து, பயங்கரவாதிகள் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர்.

இதை கண்டுபிடித்த பாதுகாப்பு அமைப்புகள், உடனடியாக அந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளன.

ஒரே நேரத்தில் 10 முதல் 30 போலி வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை செய்து, அதை பயங்கரவாத செயல்களுக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். பாதுகாப்பு அமைப்புகளின் கண்களில் மண்ணை துாவ, பணத்தை சிறிய தொகையாக பிரித்து, வாடகைக்கு எடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்.

இதற்காக ஏழை, எளிய மக்களை குறிவைக்கும் பயங்கரவாதிகள், குறைந்த நேரத்தில் கை நிறைய பணம் தருவதாக ஆசை காட்டுகின்றனர். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள், ஆன்லைன் பாஸ்வேர்டுகள் பெற்று, அந்த வங்கி கணக்கை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர்.

எச்சரிக்கை

இதுவரை, முடக்கப்பட்ட 8,000 போலி வங்கிக் கணக்குகளில், பல கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை, பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

'பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட வேண்டாம். அது தேச துரோக செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்த வங்கிக் கணக்குக்கு உரிய நபர்களும் குற்றவாளியாக கருதப்படுவர்' என ஜம்மு - காஷ்மீர் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றங்கள்!

சீனா, மலேஷியா, மியான்மர் மற்றும் கம்போடியாவில் இருந்து செயல்படும், சைபர் குற்றங்களில் ஈடுபடும் குழுக்கள், ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களை மூளை சலவை செய்து, 'கிரிப்டோ கரன்சி வாலட்' எனப்படும் மெய்நிகர் கணக்குகளை உருவாக்கும் பணிகளில் அமர்த்தி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 'வாலட்'கள் பெரும்பாலும், டிஜிட்டல் தடயங்களை மறைக்க உதவும், வி.பி.என்., எனப்படும் தனிப்பட்ட வலையமைப்பு வழியாக நிறுவப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர் சரிபார்ப்பு முறைக்கு அவசியம் ஏற்படாது. எனவே, ஜம்மு - காஷ்மீரில் வி.பி.என்., பயன்பாட்டிற்கும் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us