sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

863 விதிமீறல் வழக்குகள் பதிவு

/

863 விதிமீறல் வழக்குகள் பதிவு

863 விதிமீறல் வழக்குகள் பதிவு

863 விதிமீறல் வழக்குகள் பதிவு


ADDED : ஜன 30, 2025 11:14 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் ஜனவரி 7ம் தேதி அமலுக்கு வந்தன. அன்று முதல் 29ம் தேதி வரை பல்வேறு விதிமீறல் தொடர்பாக மொத்தம் 863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 27,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 415 சட்டவிரோத துப்பாக்கிகள், 473 தோட்டாக்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. ஆயுதச் சட்டத்தின் கீழ் 426 பேர் கைது செய்யப்பட்டனர்.

96,957 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது. 72.8 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 165.876 கிலோ போதைப்பொருட்கள், 1,200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தவிர ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9.67 கோடி ரூபாய் ரொக்கம், 37.39 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us