sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

/

பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு


ADDED : ஜூலை 18, 2025 03:01 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்லம்: கேரளாவில், பள்ளியில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து எட்டாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த தேவலக்கரா பகுதியில் தனியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் தினக்கூலி தொழிலாளி வளையபாதம் மனு என்பவரின் மூத்த மகன் மிதுன், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மிதுனின் தாயார் சுஜா, மேற்காசிய நாடான குவைத்தில் நர்சாக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், நேற்று காலை பள்ளி சென்ற மாணவன் மிதுன் அங்கு சக மாணவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடியபோது, அவனது செருப்பு அங்கிருந்த தகர ஷெட் கூரை மீது விழுந்து உள்ளது.

இதை எடுக்க அதன் மீது ஏறியபோது மேலே சென்ற மின் ஒயர் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.

கேரள மின்சார வாரியம் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகமே மாணவன் இறப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக, பொதுக்கல்வித் துறை மற்றும் கொல்லம் புறநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தி, 14 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கீதா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us