ADDED : மார் 03, 2026 02:16 AM

நாக்பூர்: மஹாராஷ்டிராவில், வெடி பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, அத்தொழிற்சாலையின் ஒன்பது இயக்குநர்களை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் அருகே ரவுல்கான் கிராமத்தில், 'எஸ்.பி.எல்., எனர்ஜி லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு, சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள, 'டெட்டனேட்டர் பேக்கிங்' பிரிவில் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், தொழிலாளர்கள் 19 பேர் பலியாகினர். காயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்துக்குள்ளான தொழிற்சாலையின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் என, 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஒன்பது பேரை கைது செய்தனர்.

