sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேன் மீது லாரி கவிழ்ந்து 9 பேர் பலி

/

வேன் மீது லாரி கவிழ்ந்து 9 பேர் பலி

வேன் மீது லாரி கவிழ்ந்து 9 பேர் பலி

வேன் மீது லாரி கவிழ்ந்து 9 பேர் பலி


ADDED : ஜூன் 04, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தில் வேன் மீது, சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்; இரண்டு பேர் காயமடைந்தனர்.

ம.பி.,யின் ஜபுவா மாவட்டம், ஷிவ்கர் மஹுதா கிராமத்தில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், பாவ்புரா என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்க சென்றனர்.

திருமணம் முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, சஞ்சேலி ரயில் மேம்பாலத்தில் வேன் சென்றபோது விபத்து ஏற்பட்டது. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சிமென்ட் லாரி, கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது கவிழ்ந்தது.

வேனில் பயணித்த 11 பேரில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us