மங்கல்புரி ரயில் நிலையத்தில் வங்கதேசத்தவர் 92 பேர் கைது
மங்கல்புரி ரயில் நிலையத்தில் வங்கதேசத்தவர் 92 பேர் கைது
ADDED : ஜூன் 10, 2025 10:19 PM
புதுடில்லி:ரயில் நிலையத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர், 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து ஏராளமானோர் இந்தியா வந்து, பல நகரங்களில் தங்கி, கையில் கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர். புதிய குடியேற்ற சட்டத்தின் படி, பிற நாட்டினர், நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஞாயிறு அன்று, டில்லி மங்கல்புரி ரயில்வே தண்டவாளம் அருகே, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் வசித்த, 92 வங்கதேசத்தவரை ரயில்வே போலீசார் சுற்றி வளைத்தனர்.
உடனே அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை கைது செய்த ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அந்த கும்பலில் 31 ஆண்கள், 22 பெண்கள், 24 இளம் சிறார்கள், 15 சிறுமியர் இருந்தனர்.
அவர்களை கைது செய்த போலீசார், வங்கதேசத்தவர் என்பதை அறிந்தனர். அவர்கள் இந்தியா வர எவ்வித ஆதாரங்களும் இல்லாததால், அவர்களை விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
டில்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து இது வரை, 242 வங்கதேசத்தவர் இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.