sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்

/

பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்

பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்

பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்


ADDED : ஏப் 18, 2025 10:49 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 10:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமலை: திருமலை அருகே பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வருகைக்காக அங்கு ஏராளமான விடுதிகள், தங்கும் இடங்கள் உள்ளன.

நேற்றிரவு திருமலையில் உள்ள கௌஸ்துபம் விடுதியில் சுற்றுலா பயணிகளின் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ரினால்ட் டஸ்டர் கார் ஒன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கார் தீ பற்றி எரிவதை உணர்ந்த கார் உரிமையாளர் உடனடியாக கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காரில் தீ கொழுந்து விட்டு எரிவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும், காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து விட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காரின் ஏ.சி.,யை ஆன் செய்த போது, மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us