sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 வயதுக்குள் 50 முறை ஐயப்பனை தரிசித்த சிறுமி

/

10 வயதுக்குள் 50 முறை ஐயப்பனை தரிசித்த சிறுமி

10 வயதுக்குள் 50 முறை ஐயப்பனை தரிசித்த சிறுமி

10 வயதுக்குள் 50 முறை ஐயப்பனை தரிசித்த சிறுமி


ADDED : ஜன 05, 2024 12:45 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி 50 முறை சபரிமலை சென்று ஐயப்பனை வணங்கி புண்ணியம் தேடி உள்ளார்.

கொல்லம் ஏழுகோனை சேர்ந்தவர் அபிலாஷ் மணி. தீவிர ஐயப்ப பக்தர். இவரது மகள் அத்ரிதி 10. இவர் 9 மாத குழந்தையாக இருந்த போது அபிலாஷ் தனது கையில் தாங்கி சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அதுமுதல் நேரமும் வாய்ப்பும்கிடைக்கும் போதெல்லாம்மகளை அழைத்து சபரிமலை வந்து தரிசனம் செய்தார்.

மண்டல, மகர பூஜை காலம் மட்டுமல்லாமல் மாத பூஜை, சித்திரை விசு போன்ற எல்லா அனைத்து பூஜை காலங்களிலும் மாலையணிந்து மகளை தவறாமல் அழைத்து வந்தார். அத்ரிதியும் மகிழ்ச்சியுடன் சபரிமலை பயணத்தை மேற்கொண்டார். எருமேலியில் பேட்டை துள்ளல் இவருக்கு குதுாகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அத்ரிதிக்கு 10 வயது முடிய ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் நேற்று முன்தினம் சபரிமலை வந்து ஐயப்பனை வணங்கினார். இது அவரது50வது சபரிமலை பயணமாகும். பின்னர் சன்னிதானத்தின் முன்புறம் நின்று போட்டோ எடுத்துகொண்ட அவர், ஐயப்பனை 50 முறை பார்த்து வணங்கியது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரியபாக்யம் என்று குறிப்பிட்டார். இனி 50 வயதுக்கு பின்னர் இங்கு மீண்டும் வருவேன் என தெரிவித்தார். இவர் அங்குஉள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.

பொதுவாக சபரிமலைக்கு 18 முறை வருபவர்கள் குரு சுவாமி என்று அழைக்கப்படுகிறார்கள். 18 முறை சபரிமலை வந்ததின் அடையாளமாக அந்த பக்தர் சன்னிதானத்தில் பின்புறம் உள்ள பஸ்மகுளம் அருகே தென்னங்கன்றுகளை நடவு செய்வர்.






      Dinamalar
      Follow us