நினைத்தாலே நெஞ்சு பதறும் கொடூரம்; மரண தண்டனை விதித்தது மும்பை கோர்ட்
நினைத்தாலே நெஞ்சு பதறும் கொடூரம்; மரண தண்டனை விதித்தது மும்பை கோர்ட்
ADDED : அக் 01, 2024 06:41 PM

மும்பை: தாயாரை கொலை செய்து, உடல் பாகங்களை வறுத்து சாப்பிட்ட நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் கடந்த 2017ம் ஆண்டு தாயார் எல்லம்மாவை கொலை செய்துள்ளார். அவரது உடல் பாகங்களை தனியே பிரித்து எடுத்து வறுவல் செய்து சாப்பிட்டு உள்ளார். மது அருந்த பணம் தராத காரணத்தினால் கொலை செய்ததாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. விசாரித்த விசாரணை நீதிமன்றம் இது அரிதிலும் அரிதான வழக்கு எனக்கூறி 2021ல் சுனிலுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. தற்போது குற்றவாளி புனே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுனில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மற்றும் பிரித்விராஜ் சவான் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. குற்றவாளி தாயாரை கொலை செய்ததுடன் மட்டுமல்லாமல், அவரது சிறுநீரகம், மூளை, இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை வறுத்து சாப்பிட்டு உள்ளார். இது நரமாமிசம் சாப்பிட்டு உள்ளதை காட்டுகிறது. இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால், சிறையிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவார் எனக்கூறி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர்.