sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

/

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது


ADDED : செப் 26, 2024 06:30 AM

Google News

ADDED : செப் 26, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு மக்களை சில நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது.

பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியின் டோல் பிளாசா அருகில், கடந்த 17ம் தேதி அதிகாலை, சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூரின் மிக முக்கியமான வர்த்தக பகுதியாகும். இங்கு ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. தொழிலாளர்கள் இரவு, பகலாக நடமாடுகின்றனர்.

கல்வி நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இத்தகைய பகுதியில் சிறுத்தை நடமாடியதால், மக்கள் அச்சமடைந்தனர். இதை பிடிக்கும்படி வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறை அதிகாரிகளும், கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். சிறுத்தை எந்த இடத்தில் அதிகம் நடமாடுகிறது என்பதை கவனித்தனர்.

எலக்ட்ரானிக் சிட்டியின் ஹெலிபாட் இடத்தில் சிறுத்தை அதிகம் நடமாடுவதும், அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வசிப்பதும் தெரிந்தது.

எனவே ஹெலிபேட் இடம் உட்பட, மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நேற்று அதிகாலை உணவு தேடி வந்த சிறுத்தை, ஹெலிபேட் இடத்தில் இருந்த கூண்டில் சிக்கியது.

இது 5 வயதான ஆண் சிறுத்தை. இதை பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்வது குறித்து, வனத்துறையினர் ஆலோசிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us