sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தன்னிறைவு கொண்ட மாநிலம்; ஹரியானாவை மாற்ற முதல்வர் உறுதி

/

தன்னிறைவு கொண்ட மாநிலம்; ஹரியானாவை மாற்ற முதல்வர் உறுதி

தன்னிறைவு கொண்ட மாநிலம்; ஹரியானாவை மாற்ற முதல்வர் உறுதி

தன்னிறைவு கொண்ட மாநிலம்; ஹரியானாவை மாற்ற முதல்வர் உறுதி


ADDED : அக் 18, 2024 02:35 PM

Google News

ADDED : அக் 18, 2024 02:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானாவை சிறந்த, வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.

ஹரியானா முதல்வராக, பா.ஜ.,வின் நயாப் சிங் சைனி, 54, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். அவருடன் இரு பெண்கள் உட்பட 13 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் பேசியதாவது: எங்களது அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் செயல்படும். குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள். கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



முன்னதாக, அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹரியானா மாநிலத்தில் தனது 2.80 கோடி குடும்ப உறுப்பினர்களுக்கு அயராது சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மாநிலத்தின் தலைமை ஊழியராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

ஹரியானாவை சிறந்த, வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுப்பேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், முழு பெரும்பான்மையுடன் எங்களின் அரசாங்கம் சேவை செய்யும். நல்லாட்சி, சமத்துவம், செழிப்பு மற்றும் ஏழை நலனுக்காக அரசு செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us