sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொதிக்கும் எண்ணெயில் விழுந்த போன் வெடித்து இளைஞர் பலி

/

கொதிக்கும் எண்ணெயில் விழுந்த போன் வெடித்து இளைஞர் பலி

கொதிக்கும் எண்ணெயில் விழுந்த போன் வெடித்து இளைஞர் பலி

கொதிக்கும் எண்ணெயில் விழுந்த போன் வெடித்து இளைஞர் பலி


ADDED : நவ 02, 2024 03:59 AM

Google News

ADDED : நவ 02, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தில் சமையல் செய்தபோது கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், இளைஞர் உயிரிழந்தார்.

ம.பி., மாநிலம் பிண்ட் மாவட்டம் லஹார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். நேற்று மொபைல் போனில் சமையல் குறிப்புகளை பார்த்தபடி சந்திர பிரகாஷ் இறைச்சி சமைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது கையில் இருந்த மொபைல் போன் தவறி, கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் விழுந்தது.

இதில் மொபைல் போன் வெடித்து, தீப்பற்றியதில் சந்திர பிரகாஷ் உடல் கருகினார்.

படுகாயம் அடைந்த அவரை, மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியில் சிந்து நதி பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே சந்திர பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us