sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

/

அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

2


ADDED : ஆக 22, 2025 12:32 AM

Google News

ADDED : ஆக 22, 2025 12:32 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: அசாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசாம் அரசு விளக்கம் அளித்துள்ளது.

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஆதார் அடையாள அட்டை வழங்க அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, “இதுவரை, ஆதார் அட்டை பெறாத பிற சமூகத்தினருக்காக செப்டம்பரில் சிறப்பு முகாம் நடத்தப்படும்,” என கூறியுள்ளார்.

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், மாவட்ட போலீஸ் உயரதிகாரியை அணுகி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மற்றும் வெளிநாட்டினர் தீர்ப்பாய அறிக்கையுடன், ஆதார் விண்ணப்பதாரரின் விபரங்களை சரிபார்த்த பிறகே, அடையாள அட்டையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us