sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திறன் மேம்பாட்டு திட்டத்தில் பலன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயம்

/

திறன் மேம்பாட்டு திட்டத்தில் பலன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயம்

திறன் மேம்பாட்டு திட்டத்தில் பலன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயம்

திறன் மேம்பாட்டு திட்டத்தில் பலன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயம்


ADDED : ஜூலை 10, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : திறன் மேம்பாட்டு திட்டத்தில் பலன்பெற, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய செயல் திட்டம்' கடந்த 2015 மார்ச்சில் மத்திய அரசால் துவக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தவும், மிகச்சரியான வேலைவாய்ப்பை பெறவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வி பயிற்சி அளிப்பதை நோக்கமாகவும் கொண்டதே இத்திட்டம்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் பலன்களை பெற ஆதாரை கட்டாயமாக்கி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:


இந்த திட்டத்தின் கீழ் பணப்பலன்கள், போக்குவரத்து படி, தங்குமிடம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாவிட்டாலும், தகுதியுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் திறன் மேம்பாட்டு பலன்களை பெற முடியும்.

ஆதார் இல்லாத தகுதியுள்ள குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதலுடன் ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் கிடைக்கும் வரை பிறப்பு சான்று, பள்ளி ஆவணங்கள், சட்டப்பூர்வமாக தத்தெடுத்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அளித்து பலன்களை பெறலாம்.

கைரேகை அழித்த வர்கள், பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை கடவுச்சொல்லை வைத்து பலன்களை பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தேவை குறித்து ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us