sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2013ல் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் ஆம்ஆத்மி: பா.ஜ., சாடல்

/

2013ல் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் ஆம்ஆத்மி: பா.ஜ., சாடல்

2013ல் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் ஆம்ஆத்மி: பா.ஜ., சாடல்

2013ல் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் ஆம்ஆத்மி: பா.ஜ., சாடல்


ADDED : பிப் 05, 2024 02:01 PM

Google News

ADDED : பிப் 05, 2024 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2013ல் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கூறுகிறது என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ.,வினர் பேரம் பேசுவதாக, கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். பா.ஜ., மீது குற்றஞ்சாட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சி புகார் அளித்த நிலையில், அவரிடம் போலீசார் நோட்டீஸ் அளித்தனர். இந்த குற்றச்சாட்டில், டில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷிக்கு குற்றப்பிரிவுத் துறை போலீசார் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

அதிஷி குற்றச்சாட்டு

இது குறித்து அமைச்சர் அதிஷி, ''எனக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வழங்கப்பட்ட நோட்டீசில், எப்.ஐ.ஆர்., பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், இந்திய தண்டனை சட்டங்களின் எந்த பிரிவும் அதில் குறிப்பிடவில்லை. அரசியல் முதலாளிகள் நடத்தும் இது போன்ற நாடகங்களில், போலீசார் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்,'' எனக் கூறியிருந்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ஷேசாத் பூனவல்லா கூறியதாவது: அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வதை யாரும் நம்ப முடியாது. ஆம் ஆத்மி கட்சியினர் 2013ம் ஆண்டு முதல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். குற்றச்சாட்டுகளுக்கு போலீசார் ஆதாரம் கேட்டு உங்கள் வீட்டு வாசலுக்கு வரும்போது, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us