ADDED : மே 23, 2026 02:06 AM

புதுடில்லி,பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, 38 வயது நபரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
தென்மேற்கு டில்லி, ஜாபர்பூர் கலானைச் சேர்ந்தவர், ரிங்கு என்ற மோனு, 38. இவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், ஜாபர்பூர் கலான் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளியில் வந்த மோனு, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வந்தார்.
திடீரென்று அவர் தலைமறைவானார். இதையடுத்து, 2025, ஏப்., 4ல், அவரை தேடப்படும் குற்றவாளியாக துவாரகா நீதிமன்றம் அறிவித்தது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், காசிபூர் பகுதியில் மோனு தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு முகாமிட்ட போலீசார், மோனுவை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
