உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 17, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
பணியாளர்கள் மற்றும் விளம்பரத்துறை
l மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை சீரமைக்க, ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
lகர்நாடக மாநில தணிக்கை மற்றும் கணக்கு துறை நடத்தும் 7,214 மையங்களிலும் ஒரே மாதிரியான சேவையை கொடுக்க 'தணிக்கை சட்டம்' அமல்படுத்தப்படும்
l பொதுமக்களின் குறைகளை தீர்க்க, மாநிலம், மாவட்டம், தாலுகா அளவில் தொடர்ந்து மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும். இதுவரை மாநில அளவில் இரண்டு முறை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு உள்ளது. முதல் முகாம் மூலம் 18,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 94 சதவீத விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
