sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஷோபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு மேலிடத்துக்கு தொண்டர்கள் கடிதம்

/

ஷோபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு மேலிடத்துக்கு தொண்டர்கள் கடிதம்

ஷோபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு மேலிடத்துக்கு தொண்டர்கள் கடிதம்

ஷோபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு மேலிடத்துக்கு தொண்டர்கள் கடிதம்


ADDED : பிப் 22, 2024 06:49 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: மத்திய விவசாய நலத்துறை இணை அமைச்சர் ஷோபாவுக்கு, 'சீட்' தர பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சீட்டுக்கு துண்டு போடுவது சூடுபிடித்துள்ளது. தற்போதைய எம்.பி.,க்களில் சிலர், சீட் உறுதி செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சிக்கமகளூரு எம்.பி.,யும், மத்திய இணை அமைச்சருமான ஷோபாவும் விதிவிலக்கல்ல.

ஆனால் அவருக்கு எதிராக தொண்டர்கள் திரும்பி இருக்கின்றனர். அவருக்கு இம்முறை சீட் தரக்கூடாது என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

இரண்டு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டும், மத்திய அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் அவர் செயல்படுத்தவில்லை. எனவே அவருக்கு பதிலாக, வேறு தலைவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பான, கடிதப் போராட்டத்தை தொண்டர்கள் துவக்கியுள்ளனர். ஷோபாவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் 5,000 தொண்டர்களிடம் கடிதம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதை பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு அனுப்ப தயாராகின்றனர். இதனால், ஷோபா அதிர்ச்சியில் உள்ளார்.






      Dinamalar
      Follow us