துபாயில் சிக்கியுள்ள நடிகர் அஜித்; நடிகைகளும் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
துபாயில் சிக்கியுள்ள நடிகர் அஜித்; நடிகைகளும் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
ADDED : மார் 02, 2026 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நடிகர் அஜித் குமார், கார் பந்தய பயிற்சி மற்றும் சர்வதேச போட்டி தயாரிப்புக்காக துபாயில் இருந்தார்.
சென்னை திரும்ப இருந்த நிலையில், நேற்று நிலவரப்படி அபுதாபி விமான நிலையத்தில் சிக்கி உள்ளார். விமான சேவை மீண்டும் துவங்கியதும் அவர் சென்னை திரும்புவார் என அவரது மேலாளர் தெரிவித்தார்.
விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து, 'ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப்' போட்டிக்காக பிரிட்டன் செல்லும் வழியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கினார்.
அதே போல், துபாய் சென்ற பாலிவுட் நடிகை சோனல் சவுகான், ஈஷா குப்தா, கொல்கட்டாவை சேர்ந்த வங்க நடிகை சுபஸ்ரீ கங்குலி ஆகியோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

