UPDATED : ஏப் 04, 2025 03:01 PM
ADDED : ஏப் 04, 2025 12:36 PM

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் தனது 87வது வயதில் காலமானார். இவர் 150 கோடிக்கு மேல் சினிமா மூலம் சொத்துக்களை சேர்த்துள்ளார். புகழ்பெற்ற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் மனோஜ் குமார் உயிரிழந்தார். மனோஜ் குமாரின் மறைவு ஒரு சகாப்தம் என்கிறது பாலிவுட்.
பிரதமர் நரேந்திர மோடி முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோஜ் குமார் தனது திரையுலக வாழ்க்கையில் பல சிறந்த படங்களை தயாரித்துள்ளார்.
தேசபக்தி படங்கள்
மனோஜ் குமாரின் உண்மையான பெயர் ஹரிகிருஷ்ண கிரி கோஸ்வாமி. மனோஜ் குமார் என்ற பெயரில் பிரபலமானார். அவரது தேசபக்தி படங்களால், அவர் பரத் குமார் என்று அழைக்கப்பட்டார். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டி வந்தன.
செலிபிரிட்டி நெட் வொர்த் அறிக்கையின்படி மனோஜ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.170 கோடி ஆகும். நீண்டகால சினிமா வெற்றியின் வழியாகவே இந்த வருமானம் பெருகியது.
கோஸ்வாமி டவர் என்ற பெயரில் ஒரு பெரிய கட்டிடம் மனோஜ் குமார் பெயரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனோஜ் குமாருக்கு 1992ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ரொட்டி, கப்பாடா மற்றும் மகான் ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். 2015ல், அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.