ADDED : ஆக 03, 2024 08:48 PM

வயநாடு; வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளை இன்று ராணுவ உடையில் ஆய்வு செய்தார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்.
கேரளாவில் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 295-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.மீட்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வயநாட்டில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் மீட்பு பணிகளை மலையாள நடிகர் மோகன்லால் ஆய்வு செய்தார்.
அப்போது ராணுவ உடையணிந்து வந்தார். மோகன்லாலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தில் லெப்டினட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (04.08.2024)முண்டக்ககை பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதியை ராணுவ உடையில் அவர் நேரில் பார்வையிட்டார். மீட்பு பணிகளை மேற்கொள்ள நடிகர் மோகன்லால் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். ராணுவ முகாமில் வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.