சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு
ADDED : செப் 20, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம்:
விக்டோரியா கவுரி
பி.பி. பாலாஜி
கே.கே. ராமகிருஷ்ணன்
ஆர். கலைமதி
கே.ஜி. திலகவதி
5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதால் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.