sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு

/

அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு

அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு

அதிக வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன்: மத்திய அரசு

16


ADDED : மார் 19, 2025 11:26 PM

Google News

ADDED : மார் 19, 2025 11:26 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மிக அதிக வயதான ஓய்வூதியதாரர்களுக்கு உடல்நிலையை கருத்தில் வைத்து, கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

ஆறாவது மத்திய சம்பளக் கமிஷன் ஒப்புதலின்படி, 80 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம், 85 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 30 சதவீதம், 90 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 40 சதவீதம், 100 வயதை எட்டும் ஓய்வூதியதாரர்களுக்கு 100 சதவீதம் என்ற அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த வயதை எட்டியதும், தானாகவே, கூடுதல் பென்சனை வங்கிகள் வழங்கத் துவங்கி விடும்.

வயது கூடும்போது, அவர்களின் உடல்நிலையை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் வங்கிகளுக்கு அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us