ADDED : செப் 13, 2011 06:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராலேகான் சித்தி : ஊழலுக்கு எதிராக, அத்வானி நடத்த உள்ள ரதயாத்திரை போலித்தனமானது என்று காந்தியவாதி அன்னா ஹசாரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தாங்கள் வலியுறுத்தி வரும் ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிப்பதாக கூறும் பா.ஜ., மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. இது, பா.ஜ., வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. ஊழலுக்கு எதிராக, கட்சி மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ள ரதயாத்திரை போலித்தனமானது என்றும், மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இது நடத்தப்படுவதாகவும், பா.ஜ., ஆளும் மாநிலங்களிலேயே ஊழல் தலைவிரித்தாடுவதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்