sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்

/

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்


ADDED : பிப் 26, 2024 03:48 PM

Google News

ADDED : பிப் 26, 2024 03:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திர அரசும் முடிவெடுத்துள்ளது. இதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (பிப்.,26) அடிக்கல் நாட்டினார். பாலாற்றில் தடுப்பணை உள்பட 3 திட்டங்களுக்கு ரூ.315 கோடி நிதி ஒதுக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு தடுப்பணையை கட்டுவதற்கான பணிகளை ஆந்திர அரசு துவக்கி இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆயத்தமாகி வருவது தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us