sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

/

ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

2


ADDED : ஜூலை 16, 2025 07:37 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆமதாபாத்-லண்டன் கேட்விக் விமான சேவையை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில விநாடிகளில் நிகழ்ந்த விபத்தை அடுத்து ஏர் இந்தியா விமான பயணங்கள் மீதான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுந்தன.

இந் நிலையில், ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள ஏர் இந்தியா நிர்வாகம், கேட்விக் விமான நிலையத்துக்கு பதில் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தற்காலிகமானது, வாரம் 3 நாட்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் விமான சேவை இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் 5 விமான சேவைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us