ADDED : மார் 30, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் வசித்தவர் மிஸ்ரா, 51. நம் விமானப்படையில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், வீட்டில் நேற்று காலை துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வீட்டின் ஜன்னல் வழியே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால், இவரை குறிவைத்து சுட்டுவிட்டு தப்பியோடினார்.
இதில், மிஸ்ராவின் மார்பில் குண்டு துளைத்து ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மிஸ்ராவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி மிஸ்ரா உயிரிழந்தார். அவரை சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.