sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது

/

நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது

நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது

நூதன முறையில் தங்கம் கடத்திய விமானப்பணிப்பெண் கைது

17


UPDATED : மே 31, 2024 07:08 PM

ADDED : மே 31, 2024 07:04 PM

Google News

UPDATED : மே 31, 2024 07:08 PM ADDED : மே 31, 2024 07:04 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணூர்: ஓமன் நாட்டிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை விமான பணிப்பெண் தன் வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கேரளாவின் கண்ணுருக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த 28-ம் தேதி கொச்சி பிரிவு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையம் வந்திறங்கிய பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் சிக்கவில்லை .

இந்நிலையில் விமானப்பணிப்பெண் ஒருவர் மேல் சந்தேகம் ஏற்படவே அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் மலக்குடலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 980 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்திய விமான பணிப்பெண் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த சுரபி காதுண் என்பதும் இதற்கு முன் இது போன்று பல முறை தங்கம் கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மாஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us