sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை: காதலன் கைது

/

ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை: காதலன் கைது

ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை: காதலன் கைது

ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை: காதலன் கைது

11


ADDED : நவ 27, 2024 08:21 PM

Google News

ADDED : நவ 27, 2024 08:21 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ஏர் இந்தியாவில் பணியாற்றிய பெண் விமானி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஸ்ருஷ்டி துலி(25) உ.பி.,யை சேர்ந்தவர். ஏர் இந்தியாவில், விமானியாக பணியாற்றி துவங்கியது முதல் மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். டில்லியில் பயிற்சிக்காக சென்ற போது, ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

கடந்த 25ம் தேதி வரை இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அன்றைய தினம் காரில், ஆதித்யா டில்லி சென்றுள்ளார். அப்போது அவரை மொபைல்போனில் அழைத்த ஸ்ருஷ்டி, தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ஆதித்யா வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன், கதவை திறந்து சென்ற போது ஸ்ருஷ்டி, டேடா கேபிளில் தூக்கு போட்டுக் கொண்டது தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ருஷ்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஸ்ருஷ்டியின் உறவினர் போலீசில் புகார் தெரிவித்தார். அதில் ஆதித்யா பண்டிட், ஸ்ருஷ்டியை மோசமாக நடத்தி துன்புறுத்தியதுடன் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஆதித்யா பண்டிட்டை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us