மருத்துவ அவசரம்; ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
மருத்துவ அவசரம்; ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
UPDATED : ஜன 12, 2026 02:52 PM
ADDED : ஜன 12, 2026 02:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மருத்துவ அவசர நிலை காரணமாக டில்லியில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.
தலைநகர் டில்லியில் இருந்து விஜயவாடாவுக்கு ஏர் இந்திய விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. அப்போது, விமானத்தில் இருந்த வயதான பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மருத்துவ அவசர நிலையைக் கருதி, விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.
விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த உடன், உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

