sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்

/

மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்

மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்

மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்

3


ADDED : ஜூலை 21, 2025 01:48 PM

Google News

3

ADDED : ஜூலை 21, 2025 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது; எனினும், அசம்பாவிதம் இன்றி விமானம் தரை இறங்கியது.

மும்பையில் கனமழை காரணமாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில், கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சென்றது.

சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். அசம்பாவிதம் எதுவும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: விமானம், தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் பீதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us