sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 நாட்களாக தாய்லாந்தில் தவிக்கும் 'ஏர் இந்தியா' விமான பயணியர்

/

3 நாட்களாக தாய்லாந்தில் தவிக்கும் 'ஏர் இந்தியா' விமான பயணியர்

3 நாட்களாக தாய்லாந்தில் தவிக்கும் 'ஏர் இந்தியா' விமான பயணியர்

3 நாட்களாக தாய்லாந்தில் தவிக்கும் 'ஏர் இந்தியா' விமான பயணியர்


ADDED : நவ 20, 2024 12:57 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்,தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து, கடந்த 16ம் தேதி ஏர் இந்தியா விமானம் டில்லி புறப்பட இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆறு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், விமானத்தில் பயணியர் ஏற்றப்பட்டனர். எனினும், கோளாறு சரி செய்யப்படாததால், மீண்டும் அவர்கள் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, விமானம் தயாராகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு பயணியர் விமானத்தில் ஏற்றப்பட்டனர். விமானமும் புறப்பட்டது. ஆனால், மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் புக்கெட் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணியருக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாததால், மூன்று நாட்களாக புக்கெட் நகரிலே இருப்பதாக பாதிக்கப்பட்ட பயணியர், சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டினர்.

ஏர் இந்தியா நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக டில்லி நோக்கி வந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் வந்த பயணியருக்கு தங்குவதற்கு அறை, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'சிலர், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us