ADDED : மார் 11, 2026 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் பயணியர் டிக்கெட்டுகளில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுதும் எண்ணெய் வினியோக தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமானங்களுக்கான எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நிலைமையை சமாளிக்க ஏர் இந்தியா நிறுவனம் பயணியர் டிக்கெட்டுகளில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை நேற்று உயர்த்தி அறிவித்தது.
விமான பயணங்களின் துாரத்தை பொறுத்து இந்த கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணியருக்கு, இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

