sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து

/

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து

9


ADDED : ஜூன் 17, 2025 01:44 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:44 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 270 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 17) ஏர் இந்தியாவின் விமானம் (எண் AI 159) ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்தது.

ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, லண்டன் செல்லும் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திலிருந்து டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு (6E 2706) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் 157 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். விமானத்தில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் கண்டறியவில்லை. இதனால், சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.








      Dinamalar
      Follow us