2 எருமை மாடு வாங்கி கட்டியிருக்கலாம்; தினமும் 40 லிட்டர் பால் கிடைத்திருக்கும்: ஐபோன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி
2 எருமை மாடு வாங்கி கட்டியிருக்கலாம்; தினமும் 40 லிட்டர் பால் கிடைத்திருக்கும்: ஐபோன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி
ADDED : ஆக 08, 2024 09:21 AM

புதுடில்லி: 'ஆப்பிள் ஐபோன், ஐபேட் பயன்படுத்துவோரிடம் இருந்து தரவுகள் திருடப்படலாம். ஆபத்தை தடுக்க மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்' மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறது. இதனால் லட்சக்கணக்கில் செலவழித்து போன் வாங்கியவர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டில் இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவி்ல எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் ஐபோன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, மீண்டும் எச்சரிக்கை செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
பணம் பறிக்க முயற்சி
போன்களில் உளவு மென்பொருள் தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கவும் வாய்ப்புள்ளதாக, இணைய வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆப்பிள் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.
எச்சரிக்கை
12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றன.
தரவுகள் திருடப்படலாம்
வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி
