பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு
பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு
UPDATED : ஜூலை 25, 2025 02:33 PM
ADDED : ஜூலை 25, 2025 02:28 PM

புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை 21ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. கடந்த 5 நாட்களாகவே, அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர், பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி பார்லிமென்டின் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையிலும், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பார்லிமென்டை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.
அதன்பேரில் சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும், பார்லிமென்ட் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், பிரச்னைகளுக்கு அமளியின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தின் மூலமே தீர்வு காண முடியும் என்று கூறினார்.
இந்த நிலையில், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று, பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டியுள்ளது. இதன்மூலம், திங்கட்கிழமை முதல் பார்லிமென்டில் அலுவல் பணிகள் சுமூகமாக நடக்கும் என்று தெரிகிறது.

