sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை ரத்து: மத்திய கல்வித்துறை அறிவிப்பு

/

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை ரத்து: மத்திய கல்வித்துறை அறிவிப்பு

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை ரத்து: மத்திய கல்வித்துறை அறிவிப்பு

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை ரத்து: மத்திய கல்வித்துறை அறிவிப்பு

18


ADDED : டிச 23, 2024 05:29 PM

Google News

ADDED : டிச 23, 2024 05:29 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது; அவர்கள் தேர்வில் தோல்வியுற்றால், 2 மாதங்களில் மறு தேர்வு எழுத வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் ஓராண்டு மீண்டும் படிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது:

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனி மேல் 5 மற்றும் 8ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது. அந்த வகுப்பு மாணவர்கள் ஆண்டுத்தேர்வில் தோல்வியுற்றால் 2 மாதங்களில் துணை தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். .

அப்போதும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறையானது, நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் ஆகிய 3000 மத்திய அரசு பள்ளிகளுக்கு பொருந்தும்.

இவ்வாறு சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

ஏற்கனவே 16 மாநில அரசுகள், டில்லி உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்கள் கட்டாய தேர்ச்சி முறையை கைவிட்டு விட்டன. மற்ற மாநில அரசுகள், இது பற்றி தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us