sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தலுக்காக தான் காங்கிரசுடன் கூட்டணி : கெஜ்ரிவால் பேட்டி

/

தேர்தலுக்காக தான் காங்கிரசுடன் கூட்டணி : கெஜ்ரிவால் பேட்டி

தேர்தலுக்காக தான் காங்கிரசுடன் கூட்டணி : கெஜ்ரிவால் பேட்டி

தேர்தலுக்காக தான் காங்கிரசுடன் கூட்டணி : கெஜ்ரிவால் பேட்டி

6


UPDATED : மே 29, 2024 11:48 PM

ADDED : மே 29, 2024 11:35 PM

Google News

UPDATED : மே 29, 2024 11:48 PM ADDED : மே 29, 2024 11:35 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கிரஸ் கட்சியுடனான திருமண பந்தம் தேர்தல் வரை தான் என டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.

‛‛இந்தியா டுடே'' செய்தி சேனலுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி, ஜூன் 04-ம் தேதி மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது.அது தான் லோக்சபா தேர்தலில் ‛‛ இண்டியா '' கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கப்பபோகிறது.

இத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சி போன்று சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறும். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவர். ஒரு தேசம், ஒரு தேர்தல், என பா.ஜ., கொணடு வர திட்டமிட்டுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

எனவே பா.ஜ.,வின் சர்வாதிகார ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், நாட்டை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் ‛‛இண்டியா'' கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான திருமண பந்தம் லோக்சபா தேர்தல் வரை தான். நிரந்தரம் அல்ல.

என்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறி ஒப்புக் கொண்டுள்ளார். எனது கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது ஊழல் புகார் கூறி சிறையில் அடைத்தது பா.ஜ., .அவர்கள் பா.ஜ.வில் இணைந்தால் உடனே ஜாமின் கிடைக்கும் என்றெல்லாம் மிரட்டியுள்ளது.

என் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி என்னை கைது செய்து சிறையில் அடைத்ததால் எனது இமேஜ் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மீண்டும் நான் சிறைக்கு செல்வது பற்றி எனக்கு கவலையில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க என்னை ஆயுள் முழுதும் சிறையில் வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயார். அதற்காக நான் எந்த சூழ்நிலையிலும முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்.

ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் எனது உதவியாளர் மீதான புகார் இதுவரை நிரூபிக்கப்பட வில்லை.கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால் கோர்ட் முடிவு செய்யும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.






      Dinamalar
      Follow us